இடம் மாறும் கோவை சிறை- பூங்காவாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவையில் மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதனால் அந்த சிறைச்சாலை இடம் மாற்றப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2010 ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. அதன் நினைவாக கோவை மாநகரத்தின் மையப் பகுதியில், இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்க முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

இதனால், மத்திய சிறைச்சாலை படிப்படியாக வேறு இடத்துக்கு மாற்றப்படும்.

இந்த தாவரவியல் பூங்கா, அப்பகுதியில் வளரக்கூடிய தாவரங்கள், பூச்செடிகள், செடிகொடிகள் மற்றும் மரங்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் உலகத் தரத்தில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல சென்னை கதீட்ரல் சாலையில் டிரைவ் இன் உட்லண்டஸ் ஹோட்டல் இருந்த இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+