மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு முன் நரிமன் ஹவுஸுக்கு வந்து லொகேஷன் பார்த்த ஹெட்லி

யூதர் போல தன்னைக் காட்டிக் கொண்டு அவர் நரிமன் ஹவுஸுக்குப் போய் வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள நரிமன் ஹவுஸ், ஒரு யூத மையமாகும். இந்த இடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ரப்பி என்கிற யூதர், அவரது மனைவி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் வசம் சிக்கியுள்ள அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற கிலானி, மும்பைத் தாக்குதலுக்கு முன்பு நரிமன் ஹவுஸுக்கு வந்து விரிவாக ஆராய்ந்து சென்ற தகவல் கிடைத்துள்ளது.
மேலும் தன்னை ஒரு யூதராக காட்டிக் கொண்டு நரிமன் ஹவுஸுக்குள்ளும் சென்று அவர் நோட்டம் விட்டுச் சென்றுள்ளார்.
அதேபோல தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களுக்கும் அவர் போய் தங்கிச் சென்றுள்ளார்.
இதன் மூலம் மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்காக ஹெட்லி லொகேஷன் பார்த்துச் சென்றிருப்பது புலனாகியுள்ளது.












Click it and Unblock the Notifications