ஜம்முவிலும் கொண்டாடும் உமர் அப்துல்லா
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: இந்த ஆண்டு பக்ரீத்தை ஸ்ரீநகரில் மட்டுமல்லாமல், ஜம்முவிலும் கொண்டாட முதல்வர் உமர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.
நாளை ஈதுல் அஸா எனப்படும் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீகநரில் மட்டும் பக்ரீத்தைக் கொண்டாடாமல், குளிர்காலத் தலைநகரான ஜம்முவிலும் கொண்டாட முதல்வர் உமர் அப்துல்லா திட்டமிட்டுள்ளார்.
முதலில் ஸ்ரீநகரில் உள்ள ஹஸரத்பாலில் அவர் பக்ரீத் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறார். பின்னர் குப்காரில் உள்ள தனது வீட்டில் மக்களைச் சந்திக்கிறார்.
பிற்பகலில் அவர் ஜம்மு செல்கிறார். அங்கு வசரத் சாலையில் உள்ள தனது வீட்டில் மக்களை சந்தித்து பக்ரீத் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்கிறார்.












Click it and Unblock the Notifications