துபாய் எஃபெக்ட்: சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிவு!
மும்பை: துபாய் எஃபெக் இந்திய பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்துவிட்டது.சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் இன்று கடும் சரிவு காணப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் 344 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸில் இன்றும் சரிவு தொடர்ந்தது. ஆனால் நேற்றைவிட மிக அதிகமாக இருந்தது பாதிப்பு.
பங்குச் சந்தை தொடங்கிய பத்தே நிமிடத்தில், சென்செக்ஸ் 451.63 புள்ளிகள் சரிந்து 16,403.30 புள்ளிகளானது.
இதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 140.50 புள்ளிகள் சரிந்தது.
துபாய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவே இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் பிற பங்குச் சந்தைகளிலும் இன்று வீழ்ச்சி காணப்படுகிறது. ஜப்பான் பங்குச்சந்தையில் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்செங் (694.66 புள்ளிகள் சரிவு), சிங்கப்பூர் பங்குச் சந்தை, சீனாவின் ஷாங்காய், தைவான் பங்குச் சந்தை, தென்கெரியா பங்குச் சந்தை போன்றவற்றில் இந்த பாதிப்பு எதிரொலித்தது.