பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தாக்கலாகவில்லை - ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஒத்திவைப்பு

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார். இந்த வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதேபோல பொட்டு அம்மான், நளினி, முருகன், அகிலா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் வழக்கிலிருந்து பிரிக்கப்பட்டு தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தனி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 17 வருடங்களாக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலாவது கோர்ட் நீதிபதி ராமலிங்கம் விடுமுறையில் இருப்பதால், 6வது கோர்ட் நீதிபதி ஆனந்தகுமாரின் அறையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது சிபிஐ சார்பில் ஒரு கவர் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை பிப்ரவரி 3ம் வாரத்திற்குத் தள்ளி வைத்தார் நீதிபதி ஆனந்தகுமார்.
கடந்த மே மாதம் முடிந்த ஈழப் போரின் போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து வழக்கை முடிக்க இறப்புச் சான்றிதழ் தருமாறு இலங்கை அரசுக்கு இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால் இதுகுறித்து இலங்கை அரசிடமிருந்து பதில் ஏதும் இல்லை.
மேலும், பொட்டு அம்மானும் நிச்சயம் இறந்து விட்டார், ஆனால் உடல் மட்டும் கிடைக்கவில்லை என்றும் இலங்கை அரசு கூறி வருகிறது. இந்த இருவரும் இறந்து விட்டதாக இலங்கை அரசு கூறி வருகின்ற போதிலும், இறப்புச் சான்றிதழ்களைத் தராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications