For Daily Alerts
Just In
3 ஆண்டுகளில் 16 வழக்குகளை வாபஸ் பெற்ற சிபிஐ
டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் சி.பி.ஐ 16 முக்கிய வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளது.
அரசுக்கு ரூ.5.16 கோடி நஷ்டம் ஏற்படுத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு உட்பட மொத்தம் 16 வழக்குகளை கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சி.பி.ஐ வாபஸ் வாங்கியுள்ளது.
பெரும்பாலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதது மற்றும் சாட்சியங்களின் மரணம் போன்ற காரணங்களால் சில வழக்குகள் வாபஸ் வாங்கப்படுவதுண்டு என சி.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு ஒன்றும் இதில் அடங்கும்.
ராஜ்யசபாவில் சி.பி.ஐ வழக்குகள் வாபஸ் ஆவது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் வகையி்ல் இத்தகவல்களை சி.பி.ஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Story first published: Saturday, November 28, 2009, 15:53 [IST]