அழகிரியிடம் ஆசி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன்
மதுரை: திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராகிருஷ்ணன் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் ஆசி பெற்றார்.
திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த அனிதா ராதா கிருஷ்ணன் அதிமுக- வில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். அத்துடன் தான் வகித்து வந்த சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அதனால் திருசெந்தூர் தொகுதியில் டிசம்பர் மாதம் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகின்றது. திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணனை திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், மதுரையில் மத்திய அமைச்சரும், தென் மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி-க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது இருவரும் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.