For Daily Alerts
Just In
டெல்லி ஹோட்டலில் பெண் மரணம் - சென்னை டாக்டருக்கு சிறை
டெல்லி: டெல்லி ஹோட்டல் அறையில் பெண் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த டாக்டருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த கேரள கண் மருத்துவர் சுரேஷ் மேனன். இவர் கடந்த 2005ம் ஆண்டு, மே 21ம் தேதி டெல்லியில் உள்ள ஹோட்டல் இந்தியா கான்டினென்டனில் தங்கியிருந்தார்.
அப்போது அதே ஹோட்டலில் ஒரு வாரமாக தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த திருமணமான சரோஜினி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சரோஜினி தனது அறையில் பிணமாகக் கிடந்தார்.
இந்த வழக்கில் டாக்டர் மேனன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஷைலேந்தர் கெளர், அந்தப் பெண் மரணமடையக் காரணமாக இருந்ததாக கூறி டாக்டர் மேனனுக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் ரூ. 2000 அபராதமும் விதிக்கப்பட்டது.
Story first published: Monday, November 30, 2009, 15:45 [IST]