துபாய் பொருளாதார நெருக்கடி: பெரும் அச்சத்தில் இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

Indian workers
துபாய்: துபாயில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி காரணமாக அங்கு அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சிப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெரும் கலக்கத்தில் ஆழந்துள்ளனர்.

ஏற்கெனவே இவர்களில் பலருக்கு வேலையிழப்பு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்து இருப்பவர்களுக்கு நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்களுக்கு இனி வேலை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என செல்போன் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், முதலீடுகளின் அளவும் துபாயில் குறையத் துவங்கிவிட்டது. ஏற்கனவே சர்வதேச நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விலக்கத் துவங்கியுள்ளன.

எனவே பொருளாதார நெருக்கடியின் அளவு எதிர்பார்ப்பை விட கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+