மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்பில்லை-மறுக்கும் ராணா

இவரும் பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானியும், இந்தியா, டென்மார்க் நாடுகளில் தீவிரவாத செயல்களில் செயல்படுத்த திட்டம் தீட்டியதாக சமீபத்தில் சிகாகோவில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடமும் எப்.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பைக்கும், இந்தியாவின் சில பகுதிகளுக்கும் இவர்கள் இருவரும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்பாக வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டதால் மும்பை சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ராணா மறுத்துள்ளார். இதுதொடர்பாக இதுகுறித்து ராணா சார்பில் அவரது வழக்கறிஞர் பாட்ரிக் பிளீகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று ராணா திட்டவட்டமாக மறுக்கிறார்.
இந்திய மக்களுக்கு எதிராக அவரிடம் எந்த துவேஷமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவுடன் தொடர்ந்த நல்லுறவைப் பேணவே அவர் விரும்புகிறார்.
சமீப காலமாக ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக இந்துக்களை அமெரிக்கா மற்றும் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்காக அவர் உதவியுள்ளார்.
தனது குடியேற்ற ஏஜென்சி தொழிலை விருத்தி செய்வதற்காக அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். சிகாகோ, நியூயார்க், டோரன்டோ ஆகிய நகரங்களில் வசிக்கும் ஏராளமான இந்தியர்களுக்கு அவர் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். இவை அவரின் நல்லெண்ணத்திற்கு உதாரணமாகும் என்றார் பாட்ரிக்.
ஏற்கனவே டென்மார்க் நாட்டுக்கு எதிராக தான் செயல்படவில்லை என்றும் ராணா விளக்கியிருந்தார். தற்போது மும்பை சம்பவத்திலும் தனக்குத் தொடர்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமையன்று ராணாவின் தம்பியான அப்பாஸ் ராணா (கனடாவில் செய்தியாளராக உள்ளார்) கூறுகையில், எனது அண்ணன் ஒரு அப்பாவி. எனக்குத் தெரி்நதவரை அவர் மீது எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. அவர் மீதான புகார்கள் அனைத்தும் பொய்யானவை.
எனக்கு எனது சகோதரரை நன்கு தெரியும். நாங்கள் அவரை நேசிக்கிறோம். மிகவும் ஒழுக்கமானவர் அவர். மிகவும் கெளரவமானவர். கடுமையான உழைப்பாளி என்றார் அப்பாஸ்.
கடந்த 10 வருடங்களாக சிகோகாவில் குடியேற்ற ஆலோசனை ஏஜென்சியை ராணா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications