கோவை அருகே சர்ச் மீது தாக்குதல்-பதட்டம்
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய திருச்சபையின் கீழ் இந்த சர்ச் இயங்கி வருகிறது.
இந்த சர்ச்சுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சர்ச் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டனர். ஆனால் அதற்குள் கல்வீசித் தாக்கியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
போகும்போது அவர்கள் கையில் இருந்த ஒரு பையை நழுவ விட்டுச் சென்றனர். அந்தப் பையை மக்கள் பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் பெட்ரோல், டீசல் பாட்டில்கள், பஞ்சுத் துணி ஆகியவை இருந்தது. இதன் மூலம் சர்ச்சை எரிக்கும் நோக்கில் அவர்கள் வந்திருந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி கிறிஸ்தவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications