For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாரில் மாதந்தோறும் 595 புதிய எய்ட்ஸ் நோயாளிகள்

By Staff
Google Oneindia Tamil News

Bihar map
பாட்னா: கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்த பீகாரில் தற்போது, மாதத்திற்கு 595 பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்படைகின்றனர்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்களில் பதிவான தகவல்களில் இருந்து இந்த புள்ளிவிவரம் பெறப்பட்டது.

பீகாரி்ல் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 6550 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24,835.

பதிவேடுகளில் உள்ள எண்ணிக்கை தான் இது. ஆனால் பீகாரில் எய்ட்ஸ் பாதித்தோர் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என கணிக்கப்படுகிறது.

எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பீகாரில் மட்டும் மாதத்திற்கு ரூ.22 கோடி செலவிடப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் செலவிட்டும், கட்டுக்கடங்காமல் நோய் அதிகரிப்பது இங்குள்ள தன்னார்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X