தாய்ப்பால் குடித்தபோது குழந்தை மூச்சு திணறி சாவு
லண்டன்: தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது தாய் அயர்ந்து தூங்கிவிட்டதால், எதிர்பாராத விதமாக குழந்தை மூச்சுத் திணறி இறந்தது.
வாஷிங்டன் நகரில் இருந்து குவைத்துக்கு விமானத்தில் சென்ற, நான்கு வார பெண் குழந்தைக்கு இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் தாய் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 29.
யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் குழந்தையுடன் பயணித்த அவர், குழந்தைக்கு பாலூட்டினார். அப்படியே அயர்ந்து தூங்கி விட்டார்.
விமானம் அட்லான்டிக் கடலின் மேலே 33 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, திடீரென அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பினர்.
மார்பில் தலை தொங்கியபடி தன் குழந்தை கிடப்பதை பார்த்து ஒன்றும் புரியாமல் அப்பெண் அழுது கொண்டிருந்தார். குழந்தையை காப்பாற்ற விமானத்தில் இருந்த மருத்துவர் ஏதேதோ முயற்சிகள் செய்தார். எதுவும் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இறக்கப்பட்டது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தாய்ப்பால் குடித்த குழந்தை இறந்தது பயணிகளிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'அந்த தாயைப் பார்த்தால் சந்தேகம் ஏதும் எழவி்ல்லை. குழந்தையுடன் தனியாகத் தான் அவர் பயணம் செய்துள்ளார்.
குவைத்தில் தனது உறவினர்களிடம் காட்டுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சங்கத்தினர் கூறுகையில், 'இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு. பொதுவாக படுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்கக் கூடாது என தாய்மார்களுக்கு அடிக்கடி அறிவுரை கூறுகிறோம். ஆனால், பெரும்பாலானோர் அதை கண்டு கொள்வதில்லை.
குறிப்பாக செவிலித் தாய்களுக்கு இந்த அறிவுரையை வலியுறுத்திச் சொல்வோம். தாய்ப்பால் கொடுப்பதற்கு என்று சில வழிமுறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தாயின் உடல் மீது சாய்ந்த நிலையில் குழந்தை பால் குடிப்பது அபாயகரமானது. குறிப்பாக தூங்கும் நேரத்தில் நிச்சயம் தரக் கூடாது. இதனால், சுவாசம் தடைபடும் வாய்ப்பு உள்ளது' என்றனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications