சென்னை வங்கியில் தீ விபத்து, சதியா?
சென்னை: லாக்கரில் இருந்த 100 சவரன் நகைகள் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தாம்பரம் ராஜாஜி தெருவில் உள்ள, 'பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லேசான புகை மூட்டத்துடன் எரிய தொடங்கிய தீ நேரம் செல்ல செல்ல மளமளவென பரவி வங்கி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.
வங்கியின் கணக்கு புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள், மேஜை நாற்காலிகள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. வங்கியில் இருந்த நகை-பணம் தப்பித்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதே வங்கியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 வாடிக்கையாளர்கள் லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 சவரன் நகைகள் மாயமானதாக புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 2 வாடிக்கையாளர்களையும் சமாதானப்படுத்த வங்கி அதிகாரிகள் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
இந் நிலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கி லாக்கரில் பொருட்கள் வைக்கப்பட்டதற்காக ஆதார பைல்கள் எல்லாம் இதில் எரிந்து போயுள்ளன. இதனால், இது திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications