தமிழகத்தில் 2 நாட்களில் 3 சர்ச்சுகள் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

Church
சென்னை: தமிழகத்தில் 2 நாட்களில் 3 சர்ச்சுகள் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சர்ச்சுகள் தொடர்ந்து தாக்கப்பட்டன. கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சுகள் மீதான தாக்குதல் தொடங்கியிருப்பதாக கருதும் வகையில் 2 நாட்களில் 3 சர்ச்சுகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் அமைந்துள்ளன.

கோவை மாவட்டம் சூலூரில் ஒரு சர்ச் தாக்கப்பட்டது. அதை பெட்ரோல் குண்டு வைத்து எரிக்கவும் முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ கவுன்சிலின் தேசிய தலைவர் சஜன் ஜார்ஜ் கூறுகையில் தமிழகத்தில் 2 நாட்களில் நடந்துள்ள 3 வது சம்பவம் இது.

ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தம்மத்துக்கோணம் என்ற இடத்தில் ஒரு சிஎஸ்ஐ சர்ச்சின் சுவரை குண்டு வைத்துத் தாக்கி துளைத்துள்ளனர். அங்குள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

2 நாட்களில் 3 சர்ச்சுகள் தாக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+