திருச்செந்தூர்-வந்தவாசி: 42 வேட்பு மனுக்கள் ஏற்பு
தூத்துக்குடி: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் தாக்கலாகியுள்ள வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
திருச்செந்தூரில் 33 பேரும், வந்தவாசியில் 20 பேரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
திருச்செந்தூரில் தாக்கலான மனுக்களை தேர்தல் அதிகாரி துரை ரவிச்சந்திரன் பரிசீலனை செய்தார். இரு சுயேட்சைகளின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
மேலும், திமுக, அதிமுக, தேமுதிகவின் மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வந்தவாசியில் 14 மனுக்கள் ஏற்பு:
இதேபோல வந்தவாசியில் நடந்த மனுக்கள் பரிசீலனையில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இங்கு திமுக, அதிமுக, தேமுதிக உள்பட மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நடந்த பரிசீலனையில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மனுக்களை வாபஸ் பெற நாளை மறுதினம் கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும்.
வரும் 19ம் தேதி இங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
இதற்கிடையே, இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் தொகுதிக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மீனாவும், வந்தவாசிக்கு ஆந்திராவைச் சேர்ந்த கிஷோரும் பார்வையாளர்களாக இருப்பார்கள்.