சத்யம் ராஜூவின் சொத்துக்களை யாரும் வாங்க - விற்க தடை!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் பினாமி பெயர்களில், ஹைதராபாத் புறநகர் பகுதிகளில் உள்ள 2,807 ஏக்கர் நிலத்தை பதிவு செய்வதற்கும், நிலம் தொடர்பான மற்ற அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
சத்யம் நிறுவனங்களின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகாக்கள், 14 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இந்த உண்மை வெளியில் தெரிய வந்ததும், ராஜூ தாமாகவே சரணடைந்தார்.
இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராமலிங்க ராஜுக்கு சொந்தமாக ஐதராபாத், சென்னை, பெங்களூரு, நாக்பூர் நகரங்களில் உள்ள 1,000 கோடி மதிப்பிலான 287 சொத்து ஆவணங்களை அமலாக்கப் பிரிவினர் கைப்பற்றி சோதனை நடத்தினர்.
விசாரணையில், இந்த சொத்துக்கள் அனைத்தும் முறைகேடு செய்த பணத்தில் வாங்கப்பட்டது என்று உறுதி படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த நிலங்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ தகுதியற்றதாக செய்து வருகின்றனர் அதிகாரிகள்.
விவசாய நிலங்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலங்கள் வணிக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் என்றும், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் நாக்பூரில் இவை உள்ளதாகவும் கண்டறியப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், சி.பி.ஐ. மேலும் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அவரும் அவரது சகோதரர்களும் மனைவிகளும் வாங்கி குவித்த சொத்துகள் எண்ணிக்கை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில், 1,065 வீடுகள், நிலங்கள், கட்டடங்களை வாங்கி குவித்துள்ளனர். அதன் அரசு மதிப்பு 350 கோடியாகும்.
சென்னையிலும்...
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1,065 சொத்துகளில், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 109ம், கர்நாடாகாவில் 11ம், நாக்பூரில் 40ம், சென்னையில் 29ம் உள்ளன.
இதில் அவரது சகோதரர்கள், அவர்களது மனைவிமார்களின் பெயரில் 6,012 ஏக்கர் நிலமும், 1,12,425 சதுர அடி கொண்ட வீடுகளும், 87,439 சதுர அடி கொண்ட கட்டடங்களும் பினாமியாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த சொத்துக்களை இனி யாரும் விற்கவோ வாங்கவோ முடியாத அளவுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர் சிபிஐ மற்றும் மாநில போலீசார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications