மோடியின் அமைச்சர்களுக்கு கலாம் ஊக்க உரை

Subscribe to Oneindia Tamil

kalam with Modi
அகமதாபாத்: தனது அமைச்சர்களுக்கு ஊக்கமூட்டும் உரையை நிகழ்த்த வருமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று கலாமும் பேசவுள்ளார்.

குஜராத்தின் கட்ச் பாலைவனப் பகுதியில் குஜராத் மாநில அமைச்சர்களுக்கான சிந்தனைக் கூட்டத்தை மோடி நடத்தி வருகிறார்.

நான்கு நாள் முகாமான இது வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் மோடி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில்தான் அப்துல் கலாம் பேசவுள்ளார். அதேபோல சுவாமி சுகபோதானந்தாவும் உரை நிகழ்த்தவிருக்கிறார்.

இதுகுறித்து கட்ச் மாவட்ட பாஜக பொறுப்பு செயலாளர் கே.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், மிகப் பெரிய பேச்சாளர் ஒருவரை, அவர் மனிதாபிமானம் மிக்க தலைவர் ஒருவரை தனது அமைச்சர்களுக்கு ஊக்கமூட்டும் உரையை நிகழ்த்த முதல்வர் மோடி முடிவு செய்தார்.

அவரது சாய்ஸ், அப்துல் கலாம். அப்துல் கலாமை தனது அமைச்சர்களுக்கும், தனக்கும், அதிகாரிகளுக்கும் ஊக்க உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார் முதல்வர்.

அதை அப்துல் கலாமும் ஏற்று பேச வருவதாக சம்மதித்துள்ளார். அமைச்சர்களுக்கு மத்தியில் கலாம் ஊக்கமூட்டும் உரையை நிகழ்த்துவார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+