ரஷ்யா சென்றடைந்தார் மன்மோகன் சிங்

அமெரிக்காவுடன் செய்து கொண்டதை விட சிறந்ததாக வர்ணிக்கப்படும் சிவில் அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன.
இரு தரப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி, புவிவெப்ப மாற்றப் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் மெத்வதேவும் ஆலோசிக்கவுள்ளனர்.
நாளை இந்திய - ரஷ்ய வருடாந்திர மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
மாஸ்கோ கிளம்புவதற்கு முன்பு டெல்லியில் மன்மோகன் சிங் தெரிவிக்கையில், ரஷ்யாவுடன் நமது பாதுகாப்பு உறவை பலப்படுத்திக் கொள்ள இந்த மாநாடு மிகவும் முக்கியமானது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவின் பலமான அஸ்திவாரமாக இந்த மாநாடு திகழ்கிறது.
கடந்த காலங்களில், இந்திய, ரஷ்ய பன்முக உறவு மிகப் பெரிய அளவில் ஆழமடைந்துள்ளது. முதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த உறவுகளை மேலும் பலமாக்க நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications