உல்ஃபா தலைவர் ராஜ்கோவாவுக்கு 12 நாள் போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil

வங்கதேச பாதுகாப்புப் படையினரால் இந்தியாவின் வசம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் இருவரும் கைவிலங்கு பூட்டப்பட்டு குவஹாத்தி கோர்ட்டில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவர் தவிர ராஜ் போரா மற்றும் இவர்களின் குடும்பத்தினரை இந்தியப் படையினர் இந்திய, வங்கதேச எல்லைப் பகுதியில் பெற்றுக் கொண்டனர். இவர்களை நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
இதையடுத்து ராஜ்கோவா மற்றும் பரூவா, போரா ஆகியோரை 12 நாள் போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜ்கோவா மற்றும் பரூவாவை ஒரே கைவிலங்கில் பிணைத்து போலீஸார் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர்.
அப்போது ராஜ்கோவா கூறுகையில், நான் சரணடையவில்லை. ஒருபோதும் சரணடைய மாட்டேன். தனி நாடு கோரிக்கையை கைவிட மாட்டேன். வங்கதேசம் எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது என்று உரத்தக் குரலில் கூறினார்.












Click it and Unblock the Notifications