அண்ணா விழா: அமைச்சர்-எம்.எல்.ஏ புறக்கணிப்பு
செங்கோட்டை காமராஜர் மண்டபத்தில் கலைஞர் தமிழ்சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழா வழக்கறிஞர் ஆபத்துகாத்தான் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் திமுக தியாகிகளுக்கு பேரறிஞர் அண்ணா விருதுகளை வழங்க சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் திராவிட தமிழர் இயக்க பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழக சுற்று சூழல் மற்றும் மாசு கட்டுபாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், தென்காசி எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்வதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.
ஆனால் விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன், சுப.வீரபாண்டியன் மட்டும் கலந்து கொண்டனர். அமைச்சர், எம்எல்ஏ வரவில்லை.
அதே போல கருப்பசாமி பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ரகீம் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்களும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications