ஜெ. மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை திரும்பப் பெற தமிழக அரசுக்கு அனுமதி
பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற தமிழக அரசுக்கு அனுமதி அளித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, தினகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மற்றும் ஜெயலலிதா, தினகரன் மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க தனிக்கோர்ட் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்குகளை விசாரிக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் திடீரென லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தும், இது தொடர்பாக பெங்களூர் தனிக்கோர்ட் பரிசீலிக்க வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பெங்களூர் தனிக்கோர்ட்டில் அரசு வக்கீல் ஆச்சார்யா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, ஜெயலலிதா மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அரசு வக்கீல் ஆச்சார்யா, ஐகோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி ஜாவித்ரகீம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா சார்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாவத் ரஹீம் விசாரணை கோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்து, லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற மனுதார்ரகளுக்கு (தமிழக அரசு) அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்த ஹோட்டல் வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி வழக்கை வாபஸ் பெறுவதாக ஏற்கனவே தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் அதை மட்டும் விசாரித்தால் தண்டனை பெற்றுத் தர முடியும் என தமிழக அரசு கருதுகிறது.
அதில் லண்டன் ஹோட்டல் வழக்கும் சேர்ந்தால் விசாரணை இழுக்கும், மேலும் போதுமான ஆதாரமும் இல்லை என்பதால் அந்த வழக்கை கைவிட தமிழக அரசு முடிவு செய்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications