அடுத்த ஆண்டில் இந்தியா வருகிறார் புடின்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் சக்தி வாய்ந்த தலைவரான பிரதமர் விலாடிமிர் புடின் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வருகிறார்.

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை ஏற்று புடின் இந்தியா வர சம்மதம் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிபர் மெத்வதேவுடன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்மோகன் சிங், பின்னர் புடினை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அடுத்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு நீங்கள் வர வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுப்பதை பெருமையாக கருதுகிறேன். உங்களது வருகை இரு தரப்பு உறவுகளை மேலும் வலுவுடையதாக்கும்.

அதிபராக இருந்தபோது கடந்த 2000மாவது ஆண்டு தாங்கள் இந்தியாவுக்கு வந்திருந்தபோதுதான் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அந்த வருகை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இரு தரப்பு உறவுகளுக்கும் பலமான அஸ்திவாரத்தை ஏற்படுத்த அது உதவியது என்றார் சிங்.

பின்னர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்பதாக தெரிவித்தார் புடின்.

இன்று நடைபெறும் இந்திய - ரஷ்ய தொழிலதிபர்கள் கூட்டத்தில் மன்மோகன் சிங்கும், புடினும் பேசவுள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு முகேஷ் அம்பானியும், ரஷ்யாவின் சிஸ்டமா நிறுவனத்தின் தலைவர் விலாடிமிர் எவ்டுஷென்கோவும் தலைமை தாங்குகின்றனர்.

இந்த சிஸ்டமா நிறுவனம்தான் எம்டிஎஸ் என்ற பெயரில் இந்தியாவில் செல்போன் சேவையை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+