Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழியர்ள் ஸ்டிரைக் - புதுச்சேரி, காரைக்காலுக்கு பஸ் போக்குவரத்து துண்டிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுவை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தால், புதுச்சேரியில் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த நவம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் காரைக்காலில் 20 பஸ்களும், புதுவையில் 80 பஸ்களும் இயங்கி வருகின்றன. இந்த போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் இருந்து காரைக்கால், பெங்களூர், குமுளி, நாகர் கோவில், சென்னை ஆகிய வெளியூர்களுக்கு நேற்று இரவு முதல் அரசு பஸ்கள் ஓடவில்லை.

இதே போல் காரைக்காலில் இருந்து புதுவை, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, நெய்வேலி ஆகிய ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. புதுச்சேரியில் டவுன் பஸ்களும் ஓடவில்லை.

காரைக்காலில் உள்ள புதுவை சாலை போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட உழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+