வைகோ மீது மேலும் ஒரு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பலமுறை கடிதங்கள் எழுதினார்.
இந்த கடிதங்களின் தொகுப்பு நூல் சென்னை ராணி சீதை மஹாலில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அந் நிகழ்ச்சியில் வைகோ பேசினார்.
அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், காழ்ப்புணர்ச்சியை தூண்டும் விதமாகவும் பேசியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம் 124 (ஏ), 153 (ஏ), (1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்றிரவு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வைகோ கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications