தெலுங்கானா விவகாரம் - நிதி வரத்து பாதிக்கும்: அசோசம் கவலை
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தால், இந்தியாவுக்கு வரும் முதலீடுகள், நிதி வரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பான அசோசம் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அது இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்போது ஆந்திராவில் நடந்து வரும் போராட்டங்கள், குழப்பச் சூழ்நிலையால் அங்குள்ள ஐடி, ஐடெஸ், உற்பத்திப் பிரிவு, ரியல் எஸ்டேட், முதலீட்டுப் பிரிவுகள் கடுமையான பாதிப்பை சந்திக்கவுள்ளன.
தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முதலீடுகளுக்கும் உகந்த சூழ்நிலை அங்கு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நிதி வரத்து பாதிக்கப்படும். முதலீடுகள் தடைபடும் நிலை உருவாகும்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிலவி வரும் அமளியான சூழ்நிலையால் மருந்து நிறுவனங்கள் ரூ. 400 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளன.
கடந்த ஆண்டு ஆன்திர மாநிலத்திற்கு அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் ரூ. 88,71,867 கோடி முதலீடுகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது என்று அசோசம் தெரிவித்துள்ளது.