For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி அருகே கட்டடம் இடிந்து 3 பெண்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: மணச்சநல்லூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த ரைஸ் மில் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் பலியாயினர். இதுவரை 3 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டு்ள்ளன.

மணச்சநல்லூரை அடுத்த திருவரங்கப்பட்டியில் இந்தச் சம்பவம் நடந்தது.

கட்டடம் இடிந்ததில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுவரை 3 பெண் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் மேலும் பலர் சி்க்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X