திருச்சி அருகே கட்டடம் இடிந்து 3 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மணச்சநல்லூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த ரைஸ் மில் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் பலியாயினர். இதுவரை 3 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டு்ள்ளன.
மணச்சநல்லூரை அடுத்த திருவரங்கப்பட்டியில் இந்தச் சம்பவம் நடந்தது.
கட்டடம் இடிந்ததில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுவரை 3 பெண் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இடிபாடுகளில் மேலும் பலர் சி்க்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications