10,000 ஊழியர்களை நீக்கும் ஆர்சலர் மித்தல்
பாரிஸ்: ஆர்சலர் மித்தல் நிறுவனம் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதன்மூலம், ஸ்டீல் உற்பத்தித் துறையில் உலகின் நம்பர் ஒன் இடத்தி்ல் இருக்கும் ஆர்சலர் மித்தலின் உலகெங்கும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் 10,000 பேர் அடுத்த ஆண்டில் வேலை இழக்க நேரிடும் என தெரிகிறது.
தற்போது இந்நிறுவனங்களில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 300 பணியாளர்கள் உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள லேசான சரிவை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் ஒன்றாக பொது செலவினங்களை குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருவாயில் 3.5 சதவீதத்தை தாண்டாத அளவுக்கு செலவினங்களை கட்டுப்படுத்துவது என்ற குறிக்கோளுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. செலவினங்களை குறைத்து, உற்பத்தியை பெருக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
மொத்தம் 500 மில்லியன் டாலர் அளவுக்கு பொது செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய பணியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற எக்சிக்யூட்டிவ்கள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications