உயிருக்கு ஆபத்து என தேவநாதன் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

Devanathan Archagar
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையை அசிங்கப்படுத்தி சிறையில் தள்ளப்பட்டுள்ள அர்ச்சகர் தேவநாதன், சிறையிலிருந்து வெளியே வர அஞ்சுகிறாராம்.

இந்த செயலில் சில பெரும்புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதால் அவர்களால் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதே தேவநாதனின் அச்சத்திற்குக் காரணமாம்.

மச்சேஸ்வரர் கோவிலை தனது காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டவர் தேவநாதன். இந்த அசிங்கமான செயலுக்காக இப்போது வேலூர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது.

போலீஸார் இருமுறை தேவநாதனை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல முக்கியப் புள்ளிகளின் கைகளும், இந்த காம லீலைகளில் இணைந்திருந்ததை அறிந்து திடுக்கிட்டனர்.

தற்போது சிறையில் இருக்கும் தேவநாதன் சிறையை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறாராம். தன்னுடன் தொடர்புடைய சில பெரும்புள்ளிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதே அவரது அச்சத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

இதன் காரணமாகவே முன்பு தேவநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீ்ன் மனு திரும்பப் பெறப்பட்டதாம்.

இதற்கிடையே தேவநாதனின் 15 நாள் காவல் முடிவடைவதால் இன்று மீண்டும் தேவநாதன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். கடந்த முறை கோர்ட்டுக்கு அவரைக் கொண்டு வந்தபோது, பெண்கள் செருப்பு, துடைப்பத்தால் அவரை அடித்தனர். இதையடுத்து இன்று தேவநாதனுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+