மேற்குவங்க கவர்னர் கோபால்கிருஷ்ண காந்தி பதவிக்காலம் முடிவு

Subscribe to Oneindia Tamil

Gopalkrishna Gandhi
கோல்கத்தா: மேற்குவங்க கவர்னராக இருந்த கோபால்கிருஷ்ண காந்தியின் ஐந்தாண்டு பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவருக்கு முறைப்படி இன்று வழியனுப்பு விழா கோல்கத்தாவில் நடைபெற்றது.

கோபாலகிருஷ்ண காந்தி தனது பொறுப்புகளை பீகார் கவர்னர் தேவானந்த் கொன்வாரிடம் இன்று முறைப்படி ஒப்படைத்தார். புதிய கவர்னர் பொறுப்பேற்கும் வரை பீகார் கவர்னர் கூடுதல் பொறுப்பை ஏற்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் பேரனான கோபால்கிருஷ்ண காந்தி கடந்த 2004ம் ஆண்டு இதே தினத்தில் மேற்குவங்க ஆளுனர் பொறுப்பை ஏற்றார்.

நந்திகிராம், சிங்கூர் பிரச்னை மற்றும் தேர்தல் அடிதடிகள் என இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான அரசியல் சூழ்நிலைகளை மேற்குவங்கம் சந்தித்தபோது கவர்னர் பொறுப்பில் கோபால்கிருஷண காந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜோதிபாசு உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து விடைபெற்றுக்கொண்டார். முதல்வர் பட்டாச்சார்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பேனர்ஜி ஆகியோரையும் ராஜ் பவன் தேனீர் விருந்துக்கு அழைத்து உபசரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+