சென்னை சாமியார் மீது பெண் கற்பழிப்பு புகார்!- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
இது குறித்து சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா இன்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து கொடுத்துள்ள புகாரில்,
அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் உள்ள சக்தி விலாஸ் மிஷனில் உள்ள டாக்டர் ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக என் அப்பாவின் நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.
நானும் அந்த நிறுவனத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பம் செய்தேன். சாமியார் ஈஸ்வரகுமார் தான் என்னிடம் இண்டர்வியூ நடத்தினார்.
சூப்பர்வைசர் வேலை தருவதாகவும் படிபடியாக சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்தில் பதவியில் அமர்த்துவதாகவும் கூறினார்.
பின்னர் ஒரு தனி அறையில் வைத்து எனக்கு காபி கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன். கண்விழித்துப் பார்த்த போது என் ஆடைகள் கலைந்த நிலையில் அலங்கோலமாகக் கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்துவிட்டதை உணர்ந்தேன்.
இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சாமியார் மிரட்டி அனுப்பினார். மேலும் அடிக்கடி போன் செய்து அழைத்தார். நான் மறுத்தேன்.
ஆனால், உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதை இண்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போய் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு மீண்டும் என்னை கற்பழித்தார்.
எனக்கு 10வயதில் மகள் இருக்கிறாள் என்று கெஞ்சினேன். அவர் விடவில்லை. தொடர்ந்து ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி என்னை அனுபவித்தார்.
தொடர்ந்தும் எனக்குத் தொல்லை கொடுத்து வரும் அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது ஆபாச வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஹேமலதா.
இது குறித்து மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுக்கிறார் ஸ்வாமிஜி:
புகார் குறித்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கூறுகையில்,
ஹேமலதா என் மனைவிக்கு பிசியோதெரபி மசாஜ் செய்வதற்காக என் வீட்டுக்கு வந்து செல்வார். அந்த பெண்ணுக்கும் எனக்கும் சம்பந்தமு இல்லை.
நான் பெண்கள் விவகாரத்தில் எல்லாம் சிக்ககூடிய ஆள் இல்லை. எனது மந்தைவெளி நிலம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எதிர்தரப்பு என்னை பணியவைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்த பார்க்கிறது.
அவர்கள் நானும் ஹேமலதாவும் சேர்ந்திருக்கும் படம் வைத்திருப்பதாக ஆரம்பத்தில் மிரட்டினர். இப்போது நான் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக சொல்கிறார்கள் என்றார்.