இந்திய, பாக். எல்லையில் வெடித்து சிதறிய கண்ணிவெடிகள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் குல்கோரி வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தப் பகுதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாலகோட் வனப்பகுதிக்கு அருகில் உள்ளது.
இந்த தீவிபத்து காரணமாக எல்லைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறின. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறுவது நின்றுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை தகவல்கள் கூறுகின்றன.
தீவிரவாதிகள் ஊடுறுவி விடாமல் தடுப்பதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், ஏராளமான நிலக் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகள்தான் வெடித்துச் சிதறின.
தீ அணைக்கப்பட்டு தற்போது நிலைமை சகஜகமாகியுள்ளதாக பிரிகேடியர் குர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் உயிரிழப்போ, காயமோ எதுவும் ஏற்படவில்லை என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.