For Daily Alerts
Just In
இந்தியாவுக்குள் தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஊடுறுவல்- முக்கிய நகரங்களில் உஷார் நிலை!
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவற்றில் பெரும் நாச வேலைகளி்ல் ஈடுபடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதையடுத்து இந்த நகங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அமெரிக்க தூதரகம், துணைத் தூதரகங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாபா அணு மின் நிலையத்திற்கும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, December 14, 2009, 15:53 [IST]