For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெர்க்கன்டைல் வங்கி சொத்து ரூ. 1000 கோடியைத் தாண்டியது

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர சொத்து ரூ. 1000 கோடியை தாண்டியுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் நாகமல் ரெட்டி தெரிவித்தார்,

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது 216வது கிளையை மும்பையில் உள்ள செம்பூரில் திறந்துள்ளது. வங்கி கிளையை கோவிந்தன் குட்டியும், பாதுகாப்பு அறையை நாகேசும், பாதுகாப்பு பெட்டக வசதியை கிஷோர் குல்சந்தானியும், கணிணி சேவையை மித்தேஷ் மணியரும், ஏடிஎம் சேவையை சம்பத்தும் திறந்து வைத்தனர்.

விழாவில் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நாகமல் ரெட்டி பேசுகையில்,

வங்கியின் மொத்த வணிகம் 30.9.09 வரையிலான ஓராண்டில 18.76 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.14,113.41 கோடியி்ல் இருந்து ரூ.167,47 கோடியாக அதிகரித்துள்ளது.

அதே காலத்தில் வைப்பு தொகை 20.97 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.8,079.79 கோடியில் இருந்து ரூ.9,774.45 கோடியாக அதிகரித்துள்ளது.

கடன்களை பொறுத்தமட்டில் 15.58 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.6,033.62 கோடியி்ல் இருந்து ரூ.6,976.53 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் 30 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் அந்நிய செலவணி வர்த்தகத்தில் ஈடுபட்டுகின்றன. நடப்பு ஆண்டில் 30.9.09 முடிய ரூ.3,066.69 கோடி அந்நிய செலவணி வணிகம் புரிந்துள்ளது.

வங்கியின் நிகர சொதது மதிப்பு ரூ. ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. வங்கியின் மூலதன தன்னிறைவு விகிதம் 13.36 சதவீதமாகவும், பேசில் இரண்டின் படி 14.33 சதவீதமாகவும் உள்ளது.

வங்கி 2013 மார்ச்சுக்குள் மொத்த வணிகம் ரூ. 50 ஆயிரம் கோடி நிகர லாபம் ரூ.500 கோடி எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணியாற்றி வருகிறது என்றார் ரெட்டி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X