தனி தெலுங்கானா மாநிலத்துக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,

தெலுங்கானா விஷயத்தில் மத்திய அரசு அவசரப்படடு தவறான முடிவெடுத்துள்ளது. ஆந்திரம் இரண்டாகப் பிரிவதை அதிமுக ஏற்கவில்லை.

அதே போல எந்த ஒரு மாநிலத்தையும் பிரிப்பதை அதிமுக ஏற்காது. தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று ராமதாஸ் போன்றவர்கள் கோரிக்கை வைப்பது தவறானது என்றார்.

தமிழகத்தை பிரிக்க திருமாவும் எதிர்ப்பு:

இந் நிலையில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி சென்னை மெமோரியல் ஹால் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவனிடம் அந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்படுவதை போல தமிழகத்திலும் பிரிவினை கோரிக்கை எழுந்துள்ளது பற்றி நிருபர்கள் கேட்டபோது,

'தனி தெலுங்கானா பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி தமிழக முதல்வர் கூறிய கருத்தையே நான் வழி மொழிகிறேன். இவ்வளவு காலம் முடிவெடுக்க தவறிய மத்திய அரசு, இப்போது எடுத்த அவசர முடிவு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

மேலும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற சிலரது கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை. தமிழ்நாட்டை பிரிக்க கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+