ஓசூரில் இருந்கு சிங்கப்பூருக்கு காய்கறி ஏற்றுமதி

Subscribe to Oneindia Tamil

Vegetables
ஒசூர்:​ வரும் புத்தாண்டு முதல் ஒசூ​ரில் இருந்து சிங்கப்பூருக்கு நாள்​தோ​றும் சுமார் 250 டன் காய்​க​றி​கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.​

சிங்கப்பூரைச் சேர்ந்த மொத்த காய்​கறி வியா​பா​ரி​கள் ஒசூர்,​​ தட்​டி​கா​னப்​பள்ளி,
பூதி​நத்​தம் ஆகிய கிரா​மங்​க​ளில் பயிர் செய்​துள்ள காய்​க​றி​களை நேற்று நேரில் ஆய்வு செய்​த​னர்.​ ​

ஒசூ​ரில் இருந்து சிங்​கப்​பூ​ருக்கு காய்​க​றி​களை விற்​பனை செய்ய தமி​ழக வேளாண்​மைத்​துறை மூலம் ஓப்​பந்​தம்ஞ செய்​துள்​ள​னர்.​​ பன்​முக தொழில் நக​ர​மான ஒசூர்,​​ தின​மும் வெளி​நா​டு​க​ளுக்கு ரோஜா பூக்​களை ஏற்​று​மதி செய்கிறது.​ தற்​போது
காய்​க​றி​களும் சிங்​கப்​பூ​ருக்கு ஏற்​று​மதி செய்​யப்பட உள்​ளது.

ஒசூர் மற்​றும் தேன்​க​னிக்​கோட்டை பகுதிகளில் உள்ள 126 கிரா​மங்​க​ளில் உள்ள சுமார் 5 ஆயி​ரம் ஹெக்​டேர் நிலப்​ப​ரப்​பில் காய்​க​றி​க​ளைப் பயிர் செய்து வரு​கின்​ற​னர்.​

தக்​காளி,​​ உருளை,​​ பீன்ஸ்,​​ கேரட்,​​ சௌசௌ,​​ வெங்​கா​யம்,​​ முட்​டை​கோஸ்,
கொத்​த​மல்லி,​​ பீட்ரூட்,​​ புதினா உள்​ளிட்​டவை இங்கு பயிர் செய்​யப்​ப​டு​கின்​றன.​

இவை பெரு​ம​ளவு ஒசூர் அருகே உள்ள பத்​த​ளப்​பள்ளி மொத்த விற்​பனை அங்​கா​டிக்கு அனுப்​பப்​ப​டு​கின்​றன.​ இங்​கி​ருந்து நாள்​தோ​றும் 500 டன் காய்​க​றி​கள் தமி​ழ​கம் மட்​டு​மின்றி,​​ வெளி​மா​நி​லங்​க​ளுக்​கும் லாரி​கள் மூலம் அனுப்பி வைக்​கப்​ப​டு​கின்​றன.​

இது​த​விர 300க்கும் மேற்​பட்ட சிறு விவ​சா​யி​கள் ஒசூர் உழ​வர் சந்​தை​யில் தின​மும் 100 முதல் 150 டன் காய்​க​றி​களை விற்​பனை செய்​கி​றார்​கள்.​ குறிப்​பாக கோவை​யில் இருந்து 100க்கும் மேற்​பட்ட வியா​பா​ரி​கள் ஒசூ​ரில் தங்கி,​​ ​பெரிய விவ​சா​யி​க​ளி​டம் இருந்து காய்​க​றி​களை நேர​டி​யாக வாங்கி,​​ லாரி​கள் மூலம் கொண்டு செல்​கின்​ற​னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+