தேர்தல் கமிஷனை மதிக்கிறோம், சொல்கிறபடி செயல்படுவோம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

பொங்கல் சமயத்தில் பென்னாகரத்தில் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்று அதிமுக, பாமக கட்சிகள் கோரியுள்ளன. தேர்தல் ஆணையத்திற்குக் கடிதமும் எழுதியுள்ளன.
இதுகுறித்து பெங்களூர் வந்துள்ள முதல்வர் கருணாநிதியிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டபோது,
பென்னாகரம் இடைத்தேர்தலும் சரி, இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களும் சரி தமிழக அரசை தேர்தல் கமிஷன் கலந்து ஆலோசிக்கவில்லை.
இப்போது பென்னாகரம் இடைத்தேர்தலையும் மாநில அரசை கலந்து ஆலோசித்து விட்டு தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை.
எங்களை பொருத்தமட்டில் தேர்தல் கமிஷன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் நாங்கள். தேர்தல் கமிஷன் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications