வேளாங்கன்னி: கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
வேளாங்கன்னி: வேளாங்கன்னி கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள்.
ஓசூரில் இருந்து வேளாங்கன்னிக்கு சாமி சரிசனம் செய்ய ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் வந்தனர்.
அவர்கள் குடும்பத்தோடு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத்திர அலைகள் வருவதும் போதுமாக இருந்தது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக டீன் ஜோன்ஸ் (17), ஜேம் ஜோன்ஸ் (22) ஆகிய இரண்டு பேரும் பெரிய அலையில் சிக்கி மூழ்கி இறந்தனர்.
இவர்கள் இருவரும் சகோதரர்கள். இதே போல் கோவையில் இருந்து வந்திருந்த வியாசர் (17) என்பவரும் நீரில் மூழ்கி பரிதாமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications