நாகர்கோவில்: ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக் கொலை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்ற இடத்தில் பிரபல ரெளடி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பூச்சிவிளாகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (27) என்ற இந்த ரெளடி 4 மாதங்களுக்கு முன் ராஜலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் இவர் ஜாமீனி்ல் வெளியே வந்தார்.
இந் நிலையில் இன்று காலை ஈத்தாமொழி அருகே சாலையில் நடந்து சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. இதையடுத்து தப்பியோடிய இவரை அக் கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது.
இதில் உடல் முழுவதும் 35 இடங்களில் வெட்டுப்பட்ட ஜெயக்குமார் அதே இடத்தில் இறந்தார். கொலைக் கும்பல் தப்பியோடிவிட்டது.
கொலையான ஜெயக்குமார், சமீபத்தில் நடந்த போலீஸ் வேலைக்கான தேர்வு எழுதியுள்ளார். இவர் மீது பல அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் காலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications