சாலமன் தீவில் நிலநடுக்கம்-சுனாமி உருவானது

அந் நாட்டு நேரப்படி இன்று காலை 8.48 மணிக்கு ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகள் அளவுக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 9.36 மணிக்கு 7.2 ரிக்டர் அளவுக்கு அதைவிட பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இதையடுத்து 0.2 மீட்டர் அளவுக்கு சிறிய சுனாமி அலைகள் ஏற்பட்டன. பிஜி உள்பட அருகாமையில் உள்ள சிறிய தீவுகளை இந்த சுனாமி அலைகள் தாக்கின. ஆனால், இதனால் சேதம் ஏதும் இல்லை.
கடந்த 2007ம் ஆண்டில் இப்பகுதியில் 8.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் தாக்கி கிஸோ நகர் கடுமையாக பாதிப்படைந்ததும், இதில் 50 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில்...:
மெக்சிகோவின் மெக்சிகலி நகரில் இருந்து 19 மைல் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.1 என பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சான்டீகோ, மெக்சிகலி ஆகிய நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டது. ஆனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications