ரவுடி சகவாசம் கொண்ட போலீசார் மீது நடவடிக்கை: டிஜிபி உறுதி
மதுரை: குற்றவாளிகளுடன் தொடர்புடைய போலீசார் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி லத்திகா சரண் கூறியுள்ளார்.
இதுகுறித்து லத்திகா சரண் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குற்றங்களில் ஈடுபடும் போலீசார் குறித்து மாவட்டக் கண்காணிப்பாளர்கள் மூலம் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் அளிக்கும் புகார்கள் குறித்து மகளிர் போலீஸ் நிலையங்கள் மட்டுமின்றி அனைத்து போலீஸ் நிலையத்திலும் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வழக்குப் பதிவதில் தாமதம் கூடாது.
சில புகார்களை விசாரித்த பின்னர் தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் புகார்தாரர்கள் அவசரப்பட்டு குழப்பமடைகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் ஆம்புலன்சுகள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது' என்றார்.
முன்னதாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி லத்திகா சரண் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications