டெல்லி-கார் ஏறி சாலையோரம் தூங்கிய 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஹோண்டா சிட்டி கார் ஏறியதில் 3 பேர் பலியானார்கள்.
காரில் இருவர் இருந்தனர். இருவரில் ஒருவர் காரை ஓட்டியுள்ளார். இருவருமே நல்ல குடிபோதையில் இருந்துள்ளனர்.
காரை தாறுமாறாக ஓட்டி வந்த அவர்கள் படேல் நகர் பகுதியில் சாலையோரம் இருந்த பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விட்டனர்.
இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண், 2 குழந்தைகள் காயமடைந்தனர்.
காரில் இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications