எலெக்ட்ரிக் காரை தவிர்க்கும் பச்செளரி: மேலும் ஒரு குட்டு!

பருவநிலை மாற்றுத்துக்கான சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பு தலைவரான பச்செளரிக்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட ரேவா எலெக்ட்ரிக் காரைக்கூட தவிர்த்துவிடுகிறார் என பிரிட்டன் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இமயமலை, அமேசான் காடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் தவறான கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர் ஐபிசிசி தலைவர் ஆர்.கே.பச்செளரி.
இவர் பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தில் இருந்து தப்பிக்க எல்லோரும் பொது போக்குவரத்து அமைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் எரிசக்தியை கூடிய மட்டும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
தூய்மையான எரிசக்திக்காக சர்வதேச நாடுகள் மத்தியில் பல்வேறு ஒப்பந்தங்களையும் அவர் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர் டெல்லியில் உள்ள பங்களாவில் இருந்து அலுவலகத்துக்கு ஒரு மைல் தூரத்தை சைக்கிளிலோ, நடந்தோ அல்லது எலெக்ட்ரிக் காரிலோ பயணிக்கலாம்.
ஆனால் அவர் பொறுப்பில்லாமல் டொயோட்டா கரோல்லா காரில் எந்த சலனமும் இல்லாமல் செல்கிறார் என்று படத்துடன் லண்டன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications