தமிழகத்தில் வேலையற்ற படித்த இளைஞர்களுக்கு ரூ.250 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வேலையற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையாக கடந்த 3 மூன்றாண்டுகளில் ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் படித்த இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை ழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டதாரிகளுக்கு ரூ.300 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில், 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். ரூ.250 கோடி இத்திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடம் கழித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி, பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 45 வயது வரையிலும் மற்றவர்களுக்கு 40 வயது வரையும் உதவித்தொகை கிடைக்கும்.

தற்போது சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு அலுவலகம், கிண்டியில் உள்ள மகளிர் ஐ.டி.ஐ வளாகத்துக்கு மாற்றப்படுகிறது.

சாந்தோமில் தற்போது செயல்படும் அனைத்து அலுவலகங்களும் இனி கிண்டியில் ஒரே இடத்தில் செயல்படும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையாளர் ஜீவரத்தினம் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+