கோவையில் மீண்டும் 'கிட்னி' மோசடி - ரூ.7 லட்சத்துக்கு விலை போன சிறுநீரகம்!

தமிழகத்தில் சிறுநீரகங்கள் கள்ளச் சந்தையில், பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு மருத்துவரோ, மருத்துவமனையோ இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுமார் 15 மருத்துவமனைகளில் சிறுநீரக வியாபாரம் நடந்ததாகக் கூறி மாநில சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த மருத்துவமனைகளின் உரிமங்களை திரும்பப்பெற்றது.
அந்த மருத்துவமனைகளில் ஒன்றான கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஆய்வு நிறுவனத்தில் தற்போது மீண்டும் சிறுநீரக வியாபாரம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இங்கு சமீபத்தில் ஒரு சிறுநீரகம் ரூ.7 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டப்படி தகுந்த உரிமம் இல்லாத மருத்துவமனைகள் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை உள்பட எதையும் மேற்கொள்ள முடியாது. மேலும், மாற்றப்படும் உறுப்புக்கு எந்தவிதமான பணப் பரிமாற்றமும் நடக்கக் கூடாது என்பதையும் மருத்துவமனை உறுதிப்படுத்தியாக வேண்டும்.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
ஆனால் ஏற்கனவே உரிமம் பறிக்கப்பட்ட கோவை மருத்துவமனையில் இந்த சட்டமீறல் மீண்டும் அரங்கேறியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், 'இதுபோன்ற குற்றங்களை நிரூபிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
சட்டப்படியான ஆவண ஆதாரங்கள் கிடைப்பதில்லை. பல சமயங்களில் சாட்சிகள் பல்டி அடித்துவிடுவார்கள். இதனால் மருத்துவமனைகள் தண்டனையில் இருந்து தப்ப பல வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும், சில மருத்துமனைகள் அரசாங்க அதிகாரிகளிடம் கை கால்களில் விழுந்து மீண்டும் இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் எனக் கூறி எப்படியாவது உரிமத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்' என்று கூறினர்.
இதனால், தற்போது இந்த சிறுநீரக மோசடி விவகாரம் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கொண்ட தனி குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க.. ரயில்வே அப்டேட் -
சாம்பாரில் பல்லி.. கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி -
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications