Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் மீண்டும் 'கிட்னி' மோசடி - ரூ.7 லட்சத்துக்கு விலை போன சிறுநீரகம்!

Subscribe to Oneindia Tamil

Kidney Racket
கோவை: கோவையில் சிக்கலில் மாட்டிய மருத்துவமனையில் மீண்டும் சிறுநீரக மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க சுகாதாரத் துறை சார்பில் தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறுநீரகங்கள் கள்ளச் சந்தையில், பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு மருத்துவரோ, மருத்துவமனையோ இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுமார் 15 மருத்துவமனைகளில் சிறுநீரக வியாபாரம் நடந்ததாகக் கூறி மாநில சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த மருத்துவமனைகளின் உரிமங்களை திரும்பப்பெற்றது.

அந்த மருத்துவமனைகளில் ஒன்றான கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஆய்வு நிறுவனத்தில் தற்போது மீண்டும் சிறுநீரக வியாபாரம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இங்கு சமீபத்தில் ஒரு சிறுநீரகம் ரூ.7 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டப்படி தகுந்த உரிமம் இல்லாத மருத்துவமனைகள் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை உள்பட எதையும் மேற்கொள்ள முடியாது. மேலும், மாற்றப்படும் உறுப்புக்கு எந்தவிதமான பணப் பரிமாற்றமும் நடக்கக் கூடாது என்பதையும் மருத்துவமனை உறுதிப்படுத்தியாக வேண்டும்.

இந்த சட்டத்தை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

ஆனால் ஏற்கனவே உரிமம் பறிக்கப்பட்ட கோவை மருத்துவமனையில் இந்த சட்டமீறல் மீண்டும் அரங்கேறியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், 'இதுபோன்ற குற்றங்களை நிரூபிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

சட்டப்படியான ஆவண ஆதாரங்கள் கிடைப்பதில்லை. பல சமயங்களில் சாட்சிகள் பல்டி அடித்துவிடுவார்கள். இதனால் மருத்துவமனைகள் தண்டனையில் இருந்து தப்ப பல வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும், சில மருத்துமனைகள் அரசாங்க அதிகாரிகளிடம் கை கால்களில் விழுந்து மீண்டும் இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் எனக் கூறி எப்படியாவது உரிமத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்' என்று கூறினர்.

இதனால், தற்போது இந்த சிறுநீரக மோசடி விவகாரம் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கொண்ட தனி குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+