நவிபத்தில் கணவன், மனைவி பலி: நகை மீது ஆர்வம் காட்டிய போலீஸ்!
நெல்லை: மேலப்பாளையம் அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் கணவன்-மனைவி பலியாகினர்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவர் நேற்று தனது மனைவி ராஜலெட்சுமியுடன் நெல்லையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
மேலப்பாளையம் அடுத்த முன்னீர்பள்ளம் டாஸ்மக் குடோன் அருகே வரும்போது நெல்லையில் இருந்து பாபநாசத்திற்கு சென்ற அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம அடைந்த இருவரும் சம்பவ இடத்திலையே இறந்தனர்.
விபத்தில் இறந்த ராஜலெட்சுமி நிறைய நகைகள் அணிந்திருந்தார். இறந்தவர்களது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் வந்தனர். அப்போது விபத்து சம்பவத்தை படமெடுக்க முயன்ற பத்திரிகைக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும் ராஜலெட்சுமி அணிந்திருந்த நகைகளை உறவினர்கள் வரும்முன்பே தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கழற்றி வைத்துக் கொள்ளுமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அந்த டிரைவர் அனைத்து நகைகளையும் கழற்றினார்.
விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் நகைகள் மாயமாகி வருவதாக புகார்கள் வரும் நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கை, நகைகளை பத்திரப்படுத்துவதற்காக அல்லது வேறு காரணத்துக்கா என அங்கிருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications