வெறும் படம் தான் காட்டுகிறார் ராகுல்: பாஜக நக்கல்!
ராஞ்சி: விலைவாசி உயர்வு குறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காத ராகுல்காந்தி, நாடு முழுவதும் சுற்றி வந்து படம் காட்டிக் கொண்டிருக்கிறார் என்று பா.ஜ.க கிண்டலடித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் பேசுகையில்,
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர காங்கிரஸ் கட்சி எந்த முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபடவில்லை.
எப்போது இப்பிரச்னையை எழுப்பினாலும், இதுகுறித்து விவாதிப்போம் என்ற பதிலைத் தான் காங்கிரஸ் மேலிடம் கூறிக்கொண்டிருக்கிறது.
நேற்று கூட பிரதமர் மன்மோகன் சிங் விலைவாசி உயர்வு குறித்து விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டை கூட்டினார். அதில் விலைவாசி உயர்வுக்கான காரணங்களை ஆராய தனிக் கமிட்டி அமைக்கப்போவதாக கூறியுள்ளார்.
ஆனால் இந்த கமிட்டியால் விளையப்போகும் பயன்கள் எதுவுமில்லை.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல்காந்தி நாட்டில் விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து இதுவரை எவ்விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதற்கு மாறாக நாடு முழுவதும் சுற்றி வந்து 'போட்டோ செஷன்' தான் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார் நக்வி.












Click it and Unblock the Notifications