காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 15 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil

பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில், ராணுவத்தினருக்கான நல முகாம் உள்ளது. அங்கு இன்று முற்பகல் 11 மணியளவில் அருகில் உள்ள கிலன்மார்க் மலைப் பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் முகாமில் இருந்த 400க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 15 ராணுவத்தினரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் கேப்டன். மற்றவர்கள் வீரர்கள் ஆவர்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
சம்பந்தப்பட்ட ராணுவ முகாமில் 300 ராணுவ பயிற்சி வீரர்கள், 100 பயிற்சியாளர்கள், 60 ஊழியர்கள் இருந்தனர். மேலும் பொதுமக்கள் தரப்பில் 50 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications