இறையாண்மைக்கு எதிரான பேச்சு: நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் முன்பு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார்.
கடந்த 2008ம் ஆண்டில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவரின் பேச்சின் சில அம்சங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாகக் கூறி அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பூபாலன் முன்பு வைகோ இன்று ஆஜரானார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில், 'முல்லைப் பெரியாறு பழைய அணையை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்' என குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications