ஜார்க்கண்டில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு: மாவோயிஸ்டுகளின் தொடர் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

கிரிதி(ஜார்க்கண்ட்): மாவோயிஸ்டுகள் மூன்றாவது நாளாக இன்றும் ரயில் தண்டவாளங்களை குண்டு வைத்து தகர்த்து நாசப்படுத்தியுள்ளனர்.

பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் மாவோயிஸ்டுகளை ஒடுக்க கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு மாநிலங்களிலும் 72 மணி நேர 'பந்த்' அறிவித்தனர். இதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு நாள் நள்ளிரவிலும் ரயில் பாதைகளை குண்டுவைத்து தகர்த்து வருகின்றனர்.

ஒரிசா, பீகார் ஆகிய பகுதிகளில் குண்டுவைத்து தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டதில் இதுவரை 2 பேர் பலியானார்கள். இதனால் ஹவுரா-மும்பை ரயில்கள் உட்பட பல்வேறு ரயில்சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் மூன்றாவது முறையாக ஜார்க்கண்டில் கிரிதி மாவட்டத்தில் உள்ள ரயில் பாதையை மாவோயிஸ்டுகள் இன்று தகர்த்துள்ளனர்.

அதிகாலை சுமார் 2 மணியளவில், கிரிதி மாவட்டத்தில் உள்ள நியியாகாட் என்ற ஊருக்கு அருகே ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் தகர்த்தனர். இதனால் இப்பகுதியில் ரயில் சேவைகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளன.
நாளாக இன்றும் பாதை முடக்க உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில் போப

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+